Home | Contact | Sitemap  
      NEWS IN DETAIL  
சென்னை, ஜூலை 12: வன்முறை மற்றும் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் இயக்கத் தலைவரும், திரைப்பட இயக்குநருமான சீமான் சென்னையில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேசினார். அப்போது, வன்முறை மற்றும் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக அவர் மீது போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, கைது செய்வதற்காக அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் திங்கள்கிழமை காலை சீமான் செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Featured Jobs
Career Guidance
More Information
Training